பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

நூலக எரிப்பு

ரஜனி அன்ரன்

“ நூலக எரிப்பு “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 30.05.2024

அழியாத வடுவாக ஆறாத ரணமாக
நூலக எரிப்பு எம்மனக் கொதிப்பு
ஞானத்தை அள்ளிக் கொடுத்த ஞானபீடம்
தமிழின் சிறப்பினை இனத்தின் பெருமையை
தனித்துவமாக்கிய ஆதார சுருதி
தீயிட்டுக் கொழுத்தப்பட்டதே விஷமிகளால் !

புகை படர்ந்த வானம்
கரிக்கறை படிந்த சுவர்கள் சாட்சியாக
சாம்பலில் புதைந்த அறிவுப்புதையல்கள்
படைப்பாளர்களின் கனவுகள்
கவிஞர்களின் கற்பனைகள்
புத்தகங்கள் குவிந்த பொக்கிஷ வீடு
தத்துவ வாதிகளின் சிந்தனைத் தேட்டங்கள்
மொத்தமாய் சாம்பல் மேடானதே !

அணைந்தது அறிவின் ஜோதி
மூடப்பட்டது கல்வியின் கதவுகள்
முடக்கப்பட்டது அறிவின் தேடல்கள்
தடைப்பட்டது முன்னேற்றம்
அதுவே நூலக எரிப்பின் அழியாத வடு
ஆனாலும் எரிந்த சாம்பல் மேட்டிலிருந்து
அறிவின் தேவதை இன்று பூத்து நிற்குது
அறிவுத் தேவையை வாரி வழங்குது
மனித குலத்திற்கு இது நல்லதொரு பாடம்
அதுவே நூலக எரிப்பின் அழியாப் பாடம் !

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading