” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(97) 06/04/23
அநீதித் தீர்ப்பு

குவலயத்தின் பெரும் பரப்பில்
கண்டனங்கள் ஏராளம்
சுரந்து வரும் கொடுமைகளும்
கோபங்களும் தாராளம்

பெண்கள் குழந்தைகள்
நோயாளர் முதியோரும்
நிம்மதி இழந்தோராய்
முடங்கியே கிடக்கின்றனர்.

மானிட நேயத்தை
இதயத்தில் சுமந்தபடி
காருண்ய பண்புகளை
பார்மீது படர விட

நேர்மையும் நியாயமும்
வேரூன்றிப் படர்ந்திடவே
நாவினிக்கும் வார்த்தைகளால்
போதனைகள் பகர்ந்தாரே

நியாயங்கள் நேர்மைகள்
வறண்ட கொடுங்கோலர்
வக்கிர வன்முறைகளை மூலதனமாக்கி
அநீதித் தீர்ப்பெழுதி நல்லாயனை
சிலுவையிலே அறைந்து கொன்றனரே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading