சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(97) 06/04/23
அநீதித் தீர்ப்பு

குவலயத்தின் பெரும் பரப்பில்
கண்டனங்கள் ஏராளம்
சுரந்து வரும் கொடுமைகளும்
கோபங்களும் தாராளம்

பெண்கள் குழந்தைகள்
நோயாளர் முதியோரும்
நிம்மதி இழந்தோராய்
முடங்கியே கிடக்கின்றனர்.

மானிட நேயத்தை
இதயத்தில் சுமந்தபடி
காருண்ய பண்புகளை
பார்மீது படர விட

நேர்மையும் நியாயமும்
வேரூன்றிப் படர்ந்திடவே
நாவினிக்கும் வார்த்தைகளால்
போதனைகள் பகர்ந்தாரே

நியாயங்கள் நேர்மைகள்
வறண்ட கொடுங்கோலர்
வக்கிர வன்முறைகளை மூலதனமாக்கி
அநீதித் தீர்ப்பெழுதி நல்லாயனை
சிலுவையிலே அறைந்து கொன்றனரே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading