மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(97) 06/04/23
அநீதித் தீர்ப்பு

குவலயத்தின் பெரும் பரப்பில்
கண்டனங்கள் ஏராளம்
சுரந்து வரும் கொடுமைகளும்
கோபங்களும் தாராளம்

பெண்கள் குழந்தைகள்
நோயாளர் முதியோரும்
நிம்மதி இழந்தோராய்
முடங்கியே கிடக்கின்றனர்.

மானிட நேயத்தை
இதயத்தில் சுமந்தபடி
காருண்ய பண்புகளை
பார்மீது படர விட

நேர்மையும் நியாயமும்
வேரூன்றிப் படர்ந்திடவே
நாவினிக்கும் வார்த்தைகளால்
போதனைகள் பகர்ந்தாரே

நியாயங்கள் நேர்மைகள்
வறண்ட கொடுங்கோலர்
வக்கிர வன்முறைகளை மூலதனமாக்கி
அநீதித் தீர்ப்பெழுதி நல்லாயனை
சிலுவையிலே அறைந்து கொன்றனரே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading