அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல ) (8 5). 01/12/22
உயிர் நேயம்

எவ்வுயிரும் தன்னுயிராய்
உயிர் நேயம் காக்கும் மனித நேயம்
துன்புறும் வேளையிலே
துணைக் கரம் நீட்டி வரும்

அன்பினை அள்ளித் தரும்
அன்புடன் அரவணைத்து
அன்பாய் அணைத்துக் காக்கும்
அதுவே நல் மனித நேயம்

உயிர்களுக்கு ஊறு நேரின்
உள்ளம் கசிந்துருகி
சாதி மத பேதமின்றி
மானிட தர்மம் காக்கும்

இன்றோ துடிக்கும் உயிர் காக்க
துணைக் கரம் ஏதுமில்லை
எரியும் நெருப்பணைக்க
அன்புக்கரம் தானுமில்லை

உயிர் நேயம் காக்கும்
மனித நேயமெங்கே
மனிதன் இருக்கின்றான்
மரத்துப் போன இதயத்தோடு்
நன்றி . வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading