10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
நேவிஸ் பிலிப்
கவி இல(85). 01/12/22
உயிர் நேயம்
எவ்வுயிரும் தன்னுயிராய் எண்ணி
உயிர் நேயம் காக்கும் மனித நேயம்
துன்புறும் வேளையிலே
துணைக் கரம் நீட்டி வரும்
அன்பினை அள்ளித் தரும்
அன்புடன் அரவணைக்கும்
அன்பாய் அணைத்துக் காக்கும்
அதுவே நல் மனித நேயம்.
உயிர்கட்கு ஊறு நேரின்
உள்ளம் கசிந்துருகி
சாதிமத பேதமின்றி
மானிட தர்மம் காக்கும்
இன்றோ துடிக்கும் உயிர் காக்க
துணைக் கரம் ஏதுமில்லை
எரியும் நெருப்பணைக்க
அன்புக்கரம் தானுமில்லை
உயிர் நேயம் காக்கும்
மனித நேயமெங்கே
மனிதன் இருக்கிறான்
மரத்துப் போன இதயத்தோடு்
நன்றி வணக்கம்்்

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...