நேவிஸ் பிலிப்

கவி இல(85). 01/12/22

உயிர் நேயம்

எவ்வுயிரும் தன்னுயிராய் எண்ணி
உயிர் நேயம் காக்கும் மனித நேயம்
துன்புறும் வேளையிலே
துணைக் கரம் நீட்டி வரும்

அன்பினை அள்ளித் தரும்
அன்புடன் அரவணைக்கும்
அன்பாய் அணைத்துக் காக்கும்
அதுவே நல் மனித நேயம்.

உயிர்கட்கு ஊறு நேரின்
உள்ளம் கசிந்துருகி
சாதிமத பேதமின்றி
மானிட தர்மம் காக்கும்

இன்றோ துடிக்கும் உயிர் காக்க
துணைக் கரம் ஏதுமில்லை
எரியும் நெருப்பணைக்க
அன்புக்கரம் தானுமில்லை

உயிர் நேயம் காக்கும்
மனித நேயமெங்கே
மனிதன் இருக்கிறான்
மரத்துப் போன இதயத்தோடு்
நன்றி வணக்கம்்்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading