புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(122) 15/02/24
காற்றின் வழி மொழியாகி
வாழ்வு தந்தாய்

வானமெனும் வீதியிலே
மேகத் திரள் ஊடறுத்து
தென்றலிலே தவழ்ந்துவந்தாய்
செந்தமிழால் படையலிட்டு
எம் செவிக்குவிருந்தாகி
மனத்துக்கு மருந்தானாய்

என்வீட்டு யன்னல் வழி
மென்னசைவாய் நீ புகுந்து
ஆன்மாவின் வெளிச்சமாய்
அறிவுக்கு தெளிவாய்
பொருள் நிறைந்த பேச்சு
மழலைகளின் வீச்சு

காற்றின்அசைவினிலே
தினம்மொரு சேதியுடன்
பேதமின்றி பேச்சுக்களும்
கருத்துப் பரிமாற்றங்களும்
கலந்துரையாடல்களும்

அக சுதந்திரம் கொண்டோம்
ஓரினமாய் இணைந்தோம்
காற்றின் வழி மொழியாக
வாழ்வு தந்த உன்னை
மறப்போமோ நாமும் நீ
எந் நாளும் வாழ்க. ,,,,,,,,,,,,
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading