திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

பண்டிகை வந்தாலே

நேவிஸ் பிலிப் கவி இல (349) 31/10/24

ஆண்டுக்கு ஆண்டு
தேதிக்குத் தேதி
வந்து வந்து போகுது
பண்டிகைகைகள்

வாடிக்கையாய் வேடிக்கையாய்
பட்டாடையும் புத்தாடையும்
சரசரக்கும்
பட்டாசும் மத்தாப்பும்
தூள்பறக்கும்

வீதியெங்கும் மின் விளக்கு
மினு மினுக்க
விண் பிளக்கும் வான வேடிக்கை
விந்தைகள் காட்டி நிற்கும்

சமயங்களும் சடங்குகளும் ஓரமாக
உணவுகளும் விருந்துகளும் ஏராளமாய்
நாவிலே தின்பண்டங்களின் இன்சுவை
உள்ளத்திலோ இனம் புரியா வெறுமை

தன்னல வேரை அறுத்தெறிவோம்
நல் எண்ண முடன் தீப விளக்கேற்றிடுவோம்
எரியாத அடுப்புகளும் எரிந்திடணும்
ஒட்டிய வயிறுகளும் நிரம்பிடணும்
துன்பங்கள் மறைந்து இன்பங்கள் மலர்தலே
மகிழ்வான பண்டிகையாம்
தீப ஒளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading