திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

பாசப்பகிர்வினிலே..

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2145!!
பாசப்பகிர்வினிலே..!!

பக்குவமாய் இரு ஐந்து திங்கள்
பகல் இரவாய்க் கண்விழித்து
பாலூட்டித் தாலாட்டி வளர்த்து
ஆளும் அன்னை வடிவே வாழ்க..

ஒன்றல்ல இரண்டல்ல சுமந்து
ஒன்றன் பின் ஒன்றாய் கருத்தரித்து
நோய் என்றும் நோ என்றும் பொறுத்து
வாயை வயிற்றை கட்டி வளர்ப்பாள்…

உண்டி தனைத் தான் விலக்கி
மெண்டு நீரைத்தான் குடித்து
மிச்சம் உள்ள பிள்ளையை வளர்க்கும்
தாய்மைக்கு புகழே தருவோம்..

பாசத்தினைப் பகிர்வதிலே
பேதமை இங்கே காட்டுவதில்லை
மூலையிலே முடங்கினாலும்
முன் வந்து போராட்டம் செய்யாளே..

அன்னை எனும் அற்புதத்தை
அழகு நிறை பெட்டகத்தை
காத்து நிற்கும் பணி நமதே
காலம் எல்லாம் போற்றுவமே..
சிவதர்சனி இராகவன்
8/5/2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading