“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

பாசப்பகிர்வினிலே……58

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025

மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும் தானே
மன்னிக்கும் பெண்ணவளும் நீயே

பொறுமையின் பொக்கிஷமும்
பொல்லாமை நீக்குபவளும்
கண்ணாய்க் காப்பவளும்
காவல் தெய்வமும் தானே

பல பிள்ளை பெற்றாலும்
பாரபட்சம் அன்றி நிலையான
பாசப்பகிர்வினிலே திகைக்க வைத்து
தித்திக்க வைப்பவரே அம்மா….

திகட்டாத அன்போடு
தினந்தோறும் பாசப்பகிர்வினிலே…
சொல்லில் வடிக்க முடிக்கா
சொல் தொடரோடு தலைவணங்கி!

என் அம்மாவோடு, அனைத்துலக
அம்மாக்களுக்கும் மனநிறைந்த
அன்னையர் தின வாழ்த்துகள்
உரித்தாகட்டும்…..

Jeba Sri
Author: Jeba Sri