மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

பாலதேவகஜன்

நிர்மூலம்

கருவாய் காத்த
காலாச்சாரம் இங்கே
கருகியே போகும்
கதிதான் எங்கும்.

காத்து நின்றவர்
கரங்களும் ஓய்ந்திட
காத்து இருந்தவன்
காட்டுறான் தன் வேலையை.

பருவங்கள் தாட்டியே
பாதைகள் நீளுதே
பாதகம் எங்குமே
படர்துதான் போகுதே.

ஆவாவும் மாவாவும்
ஆங்காங்கே முளைக்குதே
கஞ்சாவும் ஐஸ்சும்
கடல்கடந்து வருகுதே.

வெளிநாட்டு பணங்களால்
பிணவாடை வீசுதே
வெறித்தனங்கள் வீதிகளில்
விசித்திரம் காட்டுதே.

அடக்கமும் அமைதியும்
அழிந்துதான் போகுதே
அரைகுறை ஆடையும்
அகன்றதாய் தேணுதே.

எதிலும் நிமிர்வோடு
என்றே தானிருந்தோம்
அத்தனையும் நிர்மூலம்
ஆனதுவே நம் சோகம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading