பாலதேவகஜன்

நிர்மூலம்

கருவாய் காத்த
காலாச்சாரம் இங்கே
கருகியே போகும்
கதிதான் எங்கும்.

காத்து நின்றவர்
கரங்களும் ஓய்ந்திட
காத்து இருந்தவன்
காட்டுறான் தன் வேலையை.

பருவங்கள் தாட்டியே
பாதைகள் நீளுதே
பாதகம் எங்குமே
படர்துதான் போகுதே.

ஆவாவும் மாவாவும்
ஆங்காங்கே முளைக்குதே
கஞ்சாவும் ஐஸ்சும்
கடல்கடந்து வருகுதே.

வெளிநாட்டு பணங்களால்
பிணவாடை வீசுதே
வெறித்தனங்கள் வீதிகளில்
விசித்திரம் காட்டுதே.

அடக்கமும் அமைதியும்
அழிந்துதான் போகுதே
அரைகுறை ஆடையும்
அகன்றதாய் தேணுதே.

எதிலும் நிமிர்வோடு
என்றே தானிருந்தோம்
அத்தனையும் நிர்மூலம்
ஆனதுவே நம் சோகம்.

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading