பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

பாலதேவகஜன்

சலவை

உன் நினைவை
சலவை செய்தே பார்க்கிறேன்
என் நிலையில் கொஞ்சம்
மாற்றம் கேக்கிறேன்.

நீளும் வாழ்வில்
நீ! நீங்காதிருக்க
என் நெஞ்சம் தவித்து
நிலையினை இழக்க

கொஞ்சம் கருணை
கொண்டிடா காலம்
வஞ்சத்தில் எனையே
வாரியே போட்டது

உன்னத நேசம் உச்சம் பெற்றதாய்
உறுதியாய் இருக்க என்
உணர்வில் ஏதோ உறுத்தல்
உன் உறவு காட்டிய விரிசல்.

அரும்பும் வேளை
கரும்பாய் இனித்தேன்
மெருகும் தறுவாய்
மெதுவாய் கசந்தேன்

காரணம் எதுவென்று புரியவில்லை
காரியம் எதுவென்றும் உணரவில்லை
காலம் கரைத்தே கண்ணீர் வடித்தேன்
காதலை கடந்திட முடியாது தவித்தேன்

உன் சாயலில் ஒருத்தி
உலாவும் தெருவில்
பின்னே தொடரும்
பித்தனாய் ஆனேன்.

என் உள்ளத்தை
சலவை செய்தே பார்கிறேன்
கறையாய் படிந்த உன் உருவ அழகை
போக்கிட என்னால் முடியவில்லை.

என்றுமே உன் நினைப்பை
விரும்பியே நான் சும்ப்பேன்
என்றாவது ஓர் நாள்
உன் மூளையை சலவை செய்

அன்று என் தூய்மை
நீ உணர்வாய்
அதுவரை எனக்கான தனிமை
தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

Nada Mohan
Author: Nada Mohan