பாலதேவகஜன்

பனிப் பூ

இலையுதிர்ந்த மரங்களின்
நிர்வாணங்களை மறைத்து
மானம் காத்துக்கொண்ட
வானம் பொழிந்த ஆடையிது.

காட்ச்சிக்கு விருந்தாய்
கடமைக்கு தடையாய்
காணுமிடமெங்கிலும் பஞ்சாய்
படர்ந்து கிடக்கும் பனிப்பூவே!

வானம் சொரிந்த மலராய்
மண்ணை மூடிய நுரையாய்
பொங்கிய வடிகின்ற பாலாய்
நீ குவியல் கொள்கின்றாய்.

குழந்தைகள் குதூகலமாய்
கூடி விளையாடுடி
பொம்மைகள் ஆக்கி
பெருமகிழ்வு கொள்கின்றார்.

உன் மீது சறுக்கி
சாகசம் காட்ட்டிட
மலைகளை நோக்கியே
வீரர்கள் பயணங்கள் தொடர

வந்து சொரிந்த பூவே!
வாசல் தளுவிய பூவே!
வசந்தமும் உன்னாலே
வருத்தமும் உன்னாலே.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading