திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

பாலதேவகஜன்

பூக்கும் புத்தாண்டு

புதிதாய் பூக்கும்
புத்தாண்டே! வருக
விதியை வெல்கின்ற
மதியையே தருக.

பதியில் அமர்ந்தவரே!
உம் கதியாய் நின்றவர்
கஸ்ரங்களை போக்கும்
கருணையினை காட்டும்.

மாற்றம் நிகழுமென்று
எதிர்பார்திடும் புத்தாண்டே!
போற்றும் ஆண்டாய் நீ
பூத்திட மாட்டாயோ.

தோற்றதன் வலிகள்
தொலைந்திட வேண்டும்
வெற்றியின் படிகள்
தொடர்ந்திட வேண்டும்.

பிரிந்தவர் அனைவரும்
சேர்ந்திட வேண்டும்
சேர்ந்தவர் யாவரும்
செழிப்புற வேண்டும்.

மாபெரும் ஆண்டாய்
நீ மாறிட வேண்டும்
அமைதியில் உலகே!
உறைந்திட வேண்டும்.

மனங்களில் குரோதங்கள்
மங்கிட வேண்டும்
மகிழ்வு ஒன்றையே
மனமிருத்திட வேண்டும்.

அதிகார உச்சம்
ஓய்ந்திட வேண்டும்
அனைவரும் சமத்துவம்
பேணிட வேண்டும்.

அடுத்தவர் நலன்களை
காத்திட வேண்டும்
அடுத்த சந்ததிக்காய்
வாழ்ந்திட வேண்டும்.

அகதி வாழ்வு
அகன்றிட வேண்டும்
அனைவரும் தாயகம்
திரும்பிட வேண்டும்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading