பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

பாலதேவகஜன்

கவியழகு

கடந்துவிட முடியாத
கால இனிமைகளை
கரிக்கிப்போட துடிக்கும்
கடுமையான வலிகளை
கடத்திச்சென்ற கவியழகே!

உன் புகழ் பாட
உன்னையே அழைக்கிறேன்
உட்கார்ந்து இருந்தபடி
உனக்குள்ளே மூழ்கின்றேன்

கற்பனை தூண்டலும்
ஒப்பனை சாயலும்
ஒன்றிக் கொண்டிட
ஒற்றை காகித்த்தில் பிறந்தவளே!

ஒப்பற்ற உன் புகழை
வரிகளுக்குள் புகுத்தி
இசையோடு உனை மீட்ட
இன்பம் காணுமே உலகு!

வலிகளுக்கு மருந்தானாய்
வலிமைக்கு உரமானாய்
வாழ்க்கைக்கு பாடமானாய்
எனக்கே நீ! உலகமானாய்.

காதலுக்கு தூதுவனாய்
காத்திருப்புக்கு சேவகனாய்
கண்ணீருக்கு ஆறுதலாய்
கருமாரிக்கு காவியமாய்

கலைகளுக்குள் உயர்வாய்
கற்பனைக்கு பரிசாய்
வாழ்த்துக்கு முதலாய்
வந்தவளே என் கவியழகே!

உன் அழகில் மயங்கி
உன் அர்த்தத்தில் கிறங்கி
உனை மீண்டும் மீண்டும்
அழைக்கின்றேன் கவியழகே!

எனக்கான ஆறுதலும் நீயே!
எனக்கான அங்கிகாரமும் நீயே!
உனை அழைத்தபடியே
என்றைக்கும் நான் இருப்பேன்
என் கவியழகே!

Nada Mohan
Author: Nada Mohan