“பூத்திட்ட புத்தாண்டிலே”

நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)

அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க

இன்பத்தமிழாலே எளியதொரு கவி எழுதி
துன்பமெல்லாம் அகன்றோட
தூயதோர் யுகம் படைப்போம்

உண்மை அன்பு நீதியென
நாடெல்லாம் நயந்து நிற்க
மென்மை எனும் மாண்பு
தரணியெங்கும் நிறைந்திருக்க

மதங்கள் சிறப்புடனே
மாநிலத்தில் வளர்ந்திருக்க
ஓதுகின்ற ஓசையெல்லாம்
மனிதம் மலர வேண்டுமென்றே

தம் சமயம் பேணி வாழும்
நிலை உலவ வேண்டும்
உண்மையுடன் பிறர் சமயம்
மதித்து நிற்க வேண்டும்

மனித நேயப் பண்பு
மனங்களிலே இலங்க
புனிதமொடு புது வாழ்வை
புத்தாண்டில் தொடங்குவோம்….
நன்றி———

Author:

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading