துறவு பூண்ட உறவுகள் 75
” துறவு பூண்ட உறவுகள் “
பொன்.தர்மா.
வணக்கம்.
சந்தம் சிந்தும் கவி நேரம்.
********குடு குடு கிழவி *******
              “”‘””‘””'”’””””””””””””””””””””””
வக்கணையாய்ப் பேசும் வாயாடிக்  கிழவி அவள்.
வாயாலை புகைவிட்டே வங்காளமும்  போய் வருவாள்.
செதுக்கிய சிலையாட்டம் , இளம் பருவக்,காலமதில்.
உருகியே , தடியாக , ஓய்ந்த இந்த, நேரமதில்.
வாயில் , தடதடக்கு , சொல்லில்  பெரு மிடுக்கு .
காலில் உறுதி வேண்டி , கம்பு ஒன்று கையில் பிடிப்பு.
ஆடு , மாடு , பட்டியென , வருமானமும் அள்ளிக் கொட்டும்.
கோடிப் புறங்களெல்லாம், குலக்கு  மாங்கனிகள் , தரை தட்டும்.
கொல்லைப் பக்கத்திலை , கோணலான ஒரு பட்டை .
கோழிகளோ , கும்பலாகப்
 போட்டிருக்கும் , அதிலே , நிறைய முட்டை .
சள்ளையிலே , சதிராடும் , சாயம் கழன்ற கறுப்புப்  , பை .
கிள்ளி  அசை போட, அதற்குள்ளே நுழையும், அடிக்கடி , அவரது  , கை .
பெற்றுப் போட்டதுவும், கிழவியோ,எட்டுப் பத்து. ( ஆனால்)
எடுபிடிக்கோ   உதவுவது, பக்கத்து வீட்டுப்  , பட்டு ….
         குடு குடு கிழவி…
பொன்.தர்மா
 
				Author: Nada Mohan
- 
												By
		
					
- 0 comments
- 
												By
		
					
- 0 comments
 
	 
	 
															 
															 
															 
		
		 
		
		 
											 
											 
											