மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

பொன்.தர்மா.

வணக்கம்.
சந்தம் சிந்தும் கவி நேரம்.
********குடு குடு கிழவி *******
“”‘””‘””'”’””””””””””””””””””””””
வக்கணையாய்ப் பேசும் வாயாடிக் கிழவி அவள்.
வாயாலை புகைவிட்டே வங்காளமும் போய் வருவாள்.

செதுக்கிய சிலையாட்டம் , இளம் பருவக்,காலமதில்.
உருகியே , தடியாக , ஓய்ந்த இந்த, நேரமதில்.

வாயில் , தடதடக்கு , சொல்லில் பெரு மிடுக்கு .
காலில் உறுதி வேண்டி , கம்பு ஒன்று கையில் பிடிப்பு.

ஆடு , மாடு , பட்டியென , வருமானமும் அள்ளிக் கொட்டும்.
கோடிப் புறங்களெல்லாம், குலக்கு மாங்கனிகள் , தரை தட்டும்.

கொல்லைப் பக்கத்திலை , கோணலான ஒரு பட்டை .
கோழிகளோ , கும்பலாகப்
போட்டிருக்கும் , அதிலே , நிறைய முட்டை .

சள்ளையிலே , சதிராடும் , சாயம் கழன்ற கறுப்புப் , பை .
கிள்ளி அசை போட, அதற்குள்ளே நுழையும், அடிக்கடி , அவரது , கை .

பெற்றுப் போட்டதுவும், கிழவியோ,எட்டுப் பத்து. ( ஆனால்)
எடுபிடிக்கோ உதவுவது, பக்கத்து வீட்டுப் , பட்டு ….
குடு குடு கிழவி…
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading