திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

போனும் போராட்டமும்

ஜெயம் தங்கராஜா

கவி 755

போனும் போராட்டமும்

நாகரீக உலகத்தின் நாயகனாய் இதுவே
ஆசைதீர பாவிக்கும் கருவியாய் இதுவே
அடிமையாக்கி மனிதரை ஆளுவதும் இதுவே
குடித்திடும் மதுவைவிட போதைதரும் இதுவே

ஆக்கங்கள் தேங்கியும் கிடப்பது இதனாலே
தூக்கத்தின் அளவும் குறைந்துபோனதும் இதனாலே
உரையாடும் திறமை பாதிப்படைந்ததும் இதனாலே
அரைவாசி நாளும் இரையாகிப்போவதும் இதனாலே

குண்டாகி உடலும் பருமனானது எதனாலே
உண்டுவிட்டு கைபேசியுடன் விளையாடுவதால் அதனாலே
குடும்ப உறுப்பினர்கள் அந்நியர்களாகியதும் எதனாலே
உடும்புப்பிடி பிடிச்ச கைத்தொலைபேசி அதனாலே

படிப்பை பாதியில் பாழாக்கிவிடும் சாதனம்
அடித்து அந்தவிடத்தில் அமர்த்திவிடும் நூதனம்
உள்ளங்கையில் உலகம் இருப்பதாக பெருமை
உள்ளபடி சொல்லப்போனால் ஆறறிவு அடிமை

கடிகாரம் கடிதம் எல்லாமும் போச்சு
முடிவுரை நாட்காட்டிக்கும் கமராக்கும் எழுதியாச்சு
அலாரம் வைக்கிற மணிக்கூடும் போச்சு
உலாவந்த காற்றலையும் இதற்குள் முடங்கியாச்சு

இன்னும் என்னென்னதான் போனால் போச்சு
கண்ணின் ஒளியும் மெல்லனவே மங்கிப்போச்சு
வேண்டினாலும் நீளாத ஆயுளும் போச்சு
நோண்டுவதே போனை வாழ்க்கையில் பிரதானமாயாச்சு

ஜெயம்
09-01-2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading