“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 275
06/08/2024 செவ்வாய்
“ஒரு பெண்!”
——————
எழுனூற்றித் தொண்ணீற் றைந்து
இலக்கம் கொண்ட பேருந்து
எழுந்து வரும்கீரி மலைவிட்டு
ரவிக்கையிலா அவளைச் சுமந்து!

குறுக்குக் கட்டு சேலையுடனே
குண்டாய் உருண்ட உடலுடனே
கறுப்பு நிறத்திற் கிலக்கணமாய்..
கழுத்தில் நகை அணிகலனாய்!

மிதிபலகை தனிலே பிரயாணம்!
மிரட்டும் வகை சொற்பிரயோகம்!
கதிகலங்கும் நடத்துனர் மனம்!
கட்டுப்பா டிருக்கா தவர்வசம்!

அம்மணியின் குரல்தான் கேட்கும்
அதைவிடில் அமைதியே நிலவும்
கும்மாளம் சுன்னாகத்தில் ஓயும்
குடும்பஸ்தர் மூச்சும் பின்மீளும்!

தனக்கொரு பெயரை எடுத்தவள்
தரணியை மிரட்டிய பெண்ணவள்
நினைப்பில் ஒருகணம் வந்ததால்
நிறைந்தாள் கவிதைப் பரப்பதில்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan