பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 282
15/10/2024 செவ்வாய்
“பெருச்சாளி”
மகிடாசுர பெருச்சாளி
மடிந்த காலமிது!
மகாசக்தி அருள்மழை
பொழியும் நேரமிது!

உல்லாச பெருச்சாளிகள்
ஊர்விட்டு ஓடுது!
உலகின் மூலைகளில்
உறைவிடம் தேடுது!

சல்லாப வாழ்வின்று
சரிவு காணுது!
தில்லானா பாடியே
தெறித்து போகுது!

அல்லல் தானாகவே
அடங்கிப் போகுது!
தொல்லை மெதுவாக
தொலையப் போகுது!

நல்லாகும் வாழ்வென
நாடும் நினைக்குது!
கல்லார் கற்றோர்
கைசேரப் பார்க்குது!

எல்லாம் எளிதாய்
இனிதாய் நடக்குது!
நல்லாய் நடந்தால்….
நமக்கும் விடியுமா!

நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan