திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 286
19/11/2024 செவ்வாய்
“பழையன கழிதலும்
புதியன புகுதலும் வழுவல; காலமுறையினானே!”
—பவணந்தி முனிவர்
“மாற்றம்”
————-
மாற்றம் ஒன்றே மாறாதது…..
மண்ணி லிருந்து வேறாகாதது!
காற்றும் அசைவும் ஒன்றானது,
காலங் காலமாய் விலகாதது!

நாலதில் தன்னில் நகர்ந்து
நாமே இரண்டில் நிமிர்ந்து
வேலவள் விழியினில் வீழ்ந்து
விரும்பாது மூன்றில் சாய்ந்து..

வாழ்வினில் எத்தனை மாற்றம்
வரவும் செலவுமாய் சாற்றும்..
காழ்ப்பது செய்வது நாற்றம்
கடந்து போவதே ஏற்றம்!

வீதியின் விதிகள் மாறாதது!
விதியின் வலிகள் ஈறாகாது!
சோதியும் ஒளியும் மாறாதது!
சுடரும் எழிலும் வேறாகுமா!

அரசின் திசைகள் மாறலாம்!
அழிவில் இருந்தும் மீளலாம்!
உரசல் போக்கதும் தீரலாம்!
உரிமை, சமநிலை பேணலாம்!
நன்றி
மதிமகன்
குறிப்பு
…………
வழுவல- குற்றமில்லை
காழ்ப்பு—வெறுப்புணர்வு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading