பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 286
19/11/2024 செவ்வாய்
“பழையன கழிதலும்
புதியன புகுதலும் வழுவல; காலமுறையினானே!”
—பவணந்தி முனிவர்
“மாற்றம்”
————-
மாற்றம் ஒன்றே மாறாதது…..
மண்ணி லிருந்து வேறாகாதது!
காற்றும் அசைவும் ஒன்றானது,
காலங் காலமாய் விலகாதது!

நாலதில் தன்னில் நகர்ந்து
நாமே இரண்டில் நிமிர்ந்து
வேலவள் விழியினில் வீழ்ந்து
விரும்பாது மூன்றில் சாய்ந்து..

வாழ்வினில் எத்தனை மாற்றம்
வரவும் செலவுமாய் சாற்றும்..
காழ்ப்பது செய்வது நாற்றம்
கடந்து போவதே ஏற்றம்!

வீதியின் விதிகள் மாறாதது!
விதியின் வலிகள் ஈறாகாது!
சோதியும் ஒளியும் மாறாதது!
சுடரும் எழிலும் வேறாகுமா!

அரசின் திசைகள் மாறலாம்!
அழிவில் இருந்தும் மீளலாம்!
உரசல் போக்கதும் தீரலாம்!
உரிமை, சமநிலை பேணலாம்!
நன்றி
மதிமகன்
குறிப்பு
…………
வழுவல- குற்றமில்லை
காழ்ப்பு—வெறுப்புணர்வு

Nada Mohan
Author: Nada Mohan