மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 226
13/06/2023 செவ்வாய்
“மணி”
———
தன்னைத் தானே அடிக்கும்!
தகவல் தரவும் துடிக்கும்!
உன்னைத் துயில் எழுப்பும்!
உலகை விழிப்பில் ஆழ்த்தும்!

காலை மாலை எதற்கும்,
கவலை இல்லை அதற்கும்!
வேலை தொடங்கு தற்கும்!
வேளை வரும்போ தடிக்கும்!

காளை கழுத்தில் குலுங்கும்!
கவர்ந்து மனதை இழுக்கும்!
நாளைத் தொடக்கி வைக்கும்!
நகரும் நேரம் துலக்கும்!

நெல்லுக் கதிருள் வாழும்!
நேரம் வரும்போ(து) முதிரும்!
அல்லும் பகலும் அசையும்!
அதனால் பார்வை தெரியும்!

அணியாய் திரண்டால் மின்னும்!
அழகாய்ச் சேலையில் ஒளிரும்!
துணியின் விலையைக் கூட்டும்!
துவைக்கும் வேலை தவிர்க்கும்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading