மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தம் சந்திப்பு
வாரம்: 160
01/02/2022 செவ்வாய்
தாயே துணை நீயே!
நயினையில் உறையும் தாயே
நாகபூஷணி உருக் கொண்டாயே
நாற்புறமும் கடல்சூழ் தாயே
நமக்கென்றும் துணை நீயே!

நகுலாம்பிகை எனும் தாயே
நகுலேஸ்வரர் துணை நீயே!
வண்ணை வாலாம்பிகை தாயே
வைத்தீஸ்வரர் துணை நீயே!

கேதீச்சரம் வாழ் கௌரி தாயே
கேதீச்சரர் துணை என்றும் நீயே!
கோணேச்சரம் உறை மாதுமையே
கோணேச்சரரின் துணை நீயே!

முன்னேஸ்வர வடிவாம்பிகையே
முன்னை நாதனின் முதலே நீயே!
மின்னும் மூக்குத்தி மீனாட்சி தாயே
மதுரை சுந்தரேஸ்வரர் துணை நீயே!

காஞ்சி உறை காமாட்சி தாயே
கைலாச நாதரின் துணை நீயே!
காசியில் உறையும் விசாலாட்சி தாயே
கணவர் விஸ்வநாதன் மனத்தில் நீயே!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading