16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 168
29/03/2022 செவ்வாய்
“உன்னழகில் பித்தானேன்!”
———————————-
சாரளம் ஊடாய் ஓர் நாளில்
சாடை கொஞ்சம் நான் விட்டேன்!
பேரழகே நானும் உந்தனிலே
பேயும் பிடித்தேன், பித்தானேன்!
கரிய செந்நிறச் சேலையிலே
கண்டேன் உந்தன் பேரழகை!
அரிய வண்ணம் உன்மேனி
ஆகா என்ன வனப்பென்றேன்!
இளஞ் சிகப்புச் சேலை யிலும்
எடுப்பாய் நீயும் உலா வந்தாய்!
உளமே இழந்தேன் உன்னாலே
ஊரவர் இகழும் பொருளானேன்!
மஞ்சள் வண்ணச் சேலையிலே
மனதை மேலும் மயக்கி விட்டாய்!
கொஞ்சும் கிளிபோல் நெஞ்சத்திலே
கோலோச்ச நீயும் உடன்வந்தாய்!
வெள்ளை நிற உடுப்பினிலே
வியந்து நிற்க வைத்தாயே!
கொள்ளை அடித்து என்மனதை
கூனிக் குறுக வைத்தாயே!
ஆசையும் மீறிப் போயிடவே
அணைக்க வந்தேன் உந்தனையே!
கூசாது உந்தன் காவலர்கள்
குத்தியே விட்டனர்….ரோசாவே!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...