14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 168
29/03/2022 செவ்வாய்
“உன்னழகில் பித்தானேன்!”
———————————-
சாரளம் ஊடாய் ஓர் நாளில்
சாடை கொஞ்சம் நான் விட்டேன்!
பேரழகே நானும் உந்தனிலே
பேயும் பிடித்தேன், பித்தானேன்!
கரிய செந்நிறச் சேலையிலே
கண்டேன் உந்தன் பேரழகை!
அரிய வண்ணம் உன்மேனி
ஆகா என்ன வனப்பென்றேன்!
இளஞ் சிகப்புச் சேலை யிலும்
எடுப்பாய் நீயும் உலா வந்தாய்!
உளமே இழந்தேன் உன்னாலே
ஊரவர் இகழும் பொருளானேன்!
மஞ்சள் வண்ணச் சேலையிலே
மனதை மேலும் மயக்கி விட்டாய்!
கொஞ்சும் கிளிபோல் நெஞ்சத்திலே
கோலோச்ச நீயும் உடன்வந்தாய்!
வெள்ளை நிற உடுப்பினிலே
வியந்து நிற்க வைத்தாயே!
கொள்ளை அடித்து என்மனதை
கூனிக் குறுக வைத்தாயே!
ஆசையும் மீறிப் போயிடவே
அணைக்க வந்தேன் உந்தனையே!
கூசாது உந்தன் காவலர்கள்
குத்தியே விட்டனர்….ரோசாவே!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...