மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 191
13/09/2022 செவ்வாய்
எண்ணம்
—————
உள்ளத்தில் அரும்பும் எண்ணம்
உருவாகித் துளிர்க்கும் தருணம்
பள்ளத்தில் சிலபேரை வீழ்த்தும்
பார்த்திருக்க பலரை உயர்த்தும்

வண்ண மயமான எண்ணங்கள்
வளமாய் பலவும் உருவெடுக்கும்
சின்ன மனதுடை மாந்தருக்கோ
சீரற்ற எண்ணம் கருவெடுக்கும்!

எண்ணக் கருக்கள் உயர்வாக
எழிலாய் வாழ்வு உறுதி பெறும்
எண்ண எண்ண இனிப்பூட்டும்
ஏழு தலைமுறை வளங்காணும்!

இலக்கு ஒன்றை மனதிருத்தி
இனிய கருக்கள் உருவானால்
கலக்கம் எல்லாம் அகன்றிடுமே
கனியாய் வாழ்வு வளம்பெறுமே!

பள்ளம் மேடென்று பாராமல்
பாரினில் எண்ணம் உருவானால்
கள்ளம் அற்ற உலகு தோன்றும்
காரிருள் கலையும் காலம்வரும்!

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading