” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 191
13/09/2022 செவ்வாய்
எண்ணம்
—————
உள்ளத்தில் அரும்பும் எண்ணம்
உருவாகித் துளிர்க்கும் தருணம்
பள்ளத்தில் சிலபேரை வீழ்த்தும்
பார்த்திருக்க பலரை உயர்த்தும்

வண்ண மயமான எண்ணங்கள்
வளமாய் பலவும் உருவெடுக்கும்
சின்ன மனதுடை மாந்தருக்கோ
சீரற்ற எண்ணம் கருவெடுக்கும்!

எண்ணக் கருக்கள் உயர்வாக
எழிலாய் வாழ்வு உறுதி பெறும்
எண்ண எண்ண இனிப்பூட்டும்
ஏழு தலைமுறை வளங்காணும்!

இலக்கு ஒன்றை மனதிருத்தி
இனிய கருக்கள் உருவானால்
கலக்கம் எல்லாம் அகன்றிடுமே
கனியாய் வாழ்வு வளம்பெறுமே!

பள்ளம் மேடென்று பாராமல்
பாரினில் எண்ணம் உருவானால்
கள்ளம் அற்ற உலகு தோன்றும்
காரிருள் கலையும் காலம்வரும்!

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan