10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
விருப்பத் தலைப்பு
ஆள்பவர் இவரென்ன ஆண்டவரோ
அடிபற்றி இவர்கிழ்க் கிடக்க
மீள்வதை தொடராது இருக்க
மிதிப்பவர் கால்கழட்டி முடக்கு
அறைகூவிப் பாவியரை அழைத்து
அங்கங்கள் அழுகிடவே சிதைத்து
முறைகெட்டார் முதுகெலும்பு முறித்து புதைகுழியில் புழுவுண்ணப் புதைத்து
முறைமாற்றி நீசெய்திடு வேள்வி
முன்னெமக்கு நிகழ்த்தியதைத் தூவி
முள்ளைமுள்ளால் எடுத்தழித்தல் கடனே.
முப்பொழுதும் மூண்டெழும் கனலை
எப்பொழுது யாரழிக்க வருவார்
அப்பொழுதே ஆறியடங்கும் என்னினம்
மனோகரி ஜெகதீஸ்வரன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.