அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

கலவரம்

ஆணவக் கேடு அறிவுத் தீட்டு
ஆகாக் கூட்டு அண்டி அடக்கின்
அங்கு தோன்றும் கலவரம்

அருளைச் சிந்தா அக்கிரம நிலவரம்
இருளைப் பூட்டி
இயக்க மழிபின்
கருக்கொண்டு கருவ
றுக்கும் கலவரம்
மருக்கண்டு மருண்டோடி
மறைந்தோடும் சுகவரம்

தீண்டும் துயரை தடுக்க
தாண்டு வகையறி யாநிலை
நீண்டு செல்லின் நிமிடமும்
மனது காணும் கலவரம்

பிறந்த காதல்
பிறழ்வு காணில்
பிறக்குமங்கு கலவரம்
குளறு மனமும் குழம்பியே உலாவரும்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading