மனோகரி ஜெகதீஸ்வரன்

நிலா

வானக் கூரைக்குள் உலவும்
வட்ட வெளிச்சப் பந்தே
கானக் குயிலும் குரலால்
காவுதே உந்தன் அழகை

கண்களால் உன்னைக் கைதுசெய்தே
கட்டுவர் பாக்களைப் பாவலர்
பெண்ணின் முகத்துக்கும் காட்டுவர் உன்னை மகிழ்ந்திட உவமை

காதலர் மனமும் தேடும்
களவுக்காய் உந்தன் உறவை
மோகத்துள் அடிக்கடி மறைந்தும் போவாய் தூது

தாயும் தேடுவாள் மழலைக்காய்
மறைந்தும் தொலைவாய் சிலநாள்
நோயும் வருமோ உனக்கு
நெஞ்சில் உள்ளதை நீயும்கூறு

பாட்டியும் சுடுவாளம் வடையுங்கு
பகிர்ந்துண்ணத் தருவாயோ எமக்கு
ஏட்டிக்குப் போட்டி யிங்கு
எந்நாளும் இங்குண்டு

நிலமும் உண்டே
உன்னிடம்
நீயதைத் தருவாயோ எம்மிடம்
அப்போதே
உலவ வருவேன் உன்னிடம்
சுதந்திரச் சிறகு பூட்டி

மனோகரி jegathesvaran

ஊருக்காய் உலவும் நிலவே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading