சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

மாதவமே உந்தனை…..

ரஜனி அன்ரன்

மாதவமே உந்தனை…..கவி….ரஜனி அன்ரன் (B.A) 28.11.2024

மாதவ மறவரே மண்ணின் மைந்தரே
மறப்போமா உமை நாம்
தாயகமே தாரக மந்திரமாய்
தார்மீகமே இலட்சியமாய்
தியாகமே உன்னத குறிக்கோளாய்
விடியல் கனவோடு வித்தாகிய
புனிதமான உம் தியாகங்கள்
தற்கொடையான ஈகங்கள்
தமிழர் எமக்குக் கிடைத்த மாதவமே !

தோல்வியைச் சிந்தனையாக்கி
வெற்றியைப் புனிதமாக்கி
தன்னிலை மறந்து தேசத்தின் நினைவோடு
துயரம் தவிர்த்து வாழ்வினை ஈந்த
தூயவரே மாதவரே நீவிர் எம் ஒளியே !

தேசத்தின் தெருக்களெல்லாம்
தெம்மாங்காய் எழுச்சி கொள்ள
கல்லறை வீரர் கனவினைப் போற்ற
எல்லைகள் தாண்டியும்
எழுச்சி கொள்வோம்
மண்ணிற்கு ஒளிதந்த
மாதவ மணிகளை மண்ணின் மைந்தரை
மாதவமாக மனதிற் கொள்வோம் – அவர்
சந்ததி காக்கவும் கரமிணைப்போம் !

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading