மார்கழிக் குளிர்

நகுலா சிவநாதன்

மார்கழி குளிர்

மார்கழி குளிரது மனதை வாட்டுது
கார்கழி காலம் கவலையைக் கூட்டுது
நேர்வழி நடப்பு நேர்மையை காட்டுது
நெஞ்சினில் ஓர் நினைப்பு நிம்மதி கொடுக்குது

குளிரும் கூதலும் காலத்தின் நகர்வில்
பழியும் பாவமும் செய்கின்ற செயலில்
அளிக்கும் இன்பமும் அன்பென்ற சொல்லில்
களிக்கும் காலமும் கடிகார முள்ளில்

வருடத்தின் நிறைவை காட்டும் மாதம்
வந்தால் பனியும் மூசிப்பெய்யும்
பெருமையும் இதற்குண்டு பேராற்றல் கண்டு
அருமையும் அகத்தினுள் இன்பம் பூத்து

நகுலா சிவநாதன் 1789

Nada Mohan
Author: Nada Mohan

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading