“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

முடியுமா நம்தேசம்

Selvi Nithianandan

முடியுமா நம்தேசம்

இந்து சமுத்திர முத்தாய்
இயற்கை அழகின் வனப்பாய்
இலங்கை சுற்றுலாத் தேசமாய்
இறக்குமதி ஏற்றுமதி சேர்வாய்

சுதந்திரம் கிடைத்த சரித்திரம்
சுமையும் கூடிய தரித்திரம்
ஆளுமை ஆட்சிகள் பிளவுகள்
அதிகார ஆட்சியின் முடிவுகள்

போத்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர்
போட்டிபோட்ட ஆட்சிக் கொடுமை
போரும் பிரிவினையும் நாள்தோறும்
போலிவேடமாய் பலரும் நாடெங்கும்

மக்கள்சக்தி மாற்றம் கண்டிட
மாபெரும் வரியும் குறைத்திட
மண்ணிலே ஏழையும் புசித்திட
மனோகரமாய் நாட்டை ஆளு

Nada Mohan
Author: Nada Mohan