முதல் ஒலியின் அரசன் பகுதி 2

ஜெயம்

சொற்கள் மட்டும் இருந்தால் போதுமா
அதற்கு மெய்யான உயிர் தந்தவராம்
இன்று அந்தக்குரலுக்கு நம் வணக்கம்
நன்றாம் பணிக்கு நம் பாராட்டுக்கள்

மனிதரை இணைத்த மந்திர மொழி
விழிப்புணர்வு தந்த குரலின் ஒலி
அவர் சொற்கள் அறிவின் விதைகள்
அவர் செயலில் நம்பிக்கையின் நிழல்கள்

மனிதம் நிறைந்த மகத்தான ஒலி
உண்மையை உரத்து உரைக்கின்ற பணி
ஆர்வம் உழைப்பு அர்ப்பணிப்பை இட்டார்
ஒளிவாங்கிகொண்டு ஆயிரம் இதயங்களை தொட்டார்

உங்கள் குரல் எங்கும் ஒலிக்கட்டும்
உங்கள் ஒலி உயிரிப்புடன் வாழட்டும்
ஒலியின் உலகில் ஒளியாக இருக்கும்
நம் வானொலி அதிபருக்கு வாழ்த்துக்கள்

Author:

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading