ரஜனி அன்ரன்

“ தந்தையெனும் விந்தை “ கவி……ரஜனி அன்ரன்….(B.A) 26.05.2022

தந்தையர் நாடாம் ஜேர்மனியில்
தந்தையர் தினமாம்
ஆயிரம் கனவுகளை ஆழ்மனதில் சுமந்து
அன்பினை மனதில் பூட்டி
தூரமாய் நின்று ரசித்திடும்
பாசக்காரத் தந்தையை தந்தையெனும் விந்தையை
நேசத்தோடு நினைத்திடுவோம் !

முதலெழுத்தின் முகவரியாகி
மெழுகாய் உருகி முழுதாய் சுமந்து
சக்கரமாய் சுழன்று எமக்காய் வாழ்ந்த
தந்தையெனும் விந்தையை
தன்னலமில்லாத் தியாகியை
உழைப்பின் உன்னதரை
உவகையோடு நினைத்திடுவோம் !

கண்டிப்பை எமக்குக் காட்டி
கருணையைப் பூட்டி வைத்து
கஸ்டத்தை மனதில் புதைத்து
கடினமாய் உழைத்த ஜீவனை
அதிசயமான புத்தகத்தை
ஆற்றலின் வல்லாளனை
ஆழமாய் நேசிப்போம் என்றும் !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading