மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

ரஜனி அன்ரன்

“ தந்தையெனும் விந்தை “ கவி……ரஜனி அன்ரன்….(B.A) 26.05.2022

தந்தையர் நாடாம் ஜேர்மனியில்
தந்தையர் தினமாம்
ஆயிரம் கனவுகளை ஆழ்மனதில் சுமந்து
அன்பினை மனதில் பூட்டி
தூரமாய் நின்று ரசித்திடும்
பாசக்காரத் தந்தையை தந்தையெனும் விந்தையை
நேசத்தோடு நினைத்திடுவோம் !

முதலெழுத்தின் முகவரியாகி
மெழுகாய் உருகி முழுதாய் சுமந்து
சக்கரமாய் சுழன்று எமக்காய் வாழ்ந்த
தந்தையெனும் விந்தையை
தன்னலமில்லாத் தியாகியை
உழைப்பின் உன்னதரை
உவகையோடு நினைத்திடுவோம் !

கண்டிப்பை எமக்குக் காட்டி
கருணையைப் பூட்டி வைத்து
கஸ்டத்தை மனதில் புதைத்து
கடினமாய் உழைத்த ஜீவனை
அதிசயமான புத்தகத்தை
ஆற்றலின் வல்லாளனை
ஆழமாய் நேசிப்போம் என்றும் !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading