” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ உழைப்பு “….கவி….ரஜனி அன்ரன்(B.A) 04.05.2023

உழைப்பின் வாசமே
உழைப்பாளிகளின் சுவாசம்
உடலை இயந்திரமாக்கி
உழைப்பை உரமாக்கி
உழைக்கும் வர்க்கமே
உன்னதமான உழைப்பாளிகள்
உலகம் இயங்க உயிர்கள் வாழ
உழைப்பாளிகளின் கடின உழைப்பே உறுதுணை !

உடலும் மனமும் வலுவடைய
மனிதனைப் பண்படுத்துவது உழைப்பு
தன்னம்பிக்கை உணர்வை ஊட்டி
சாதனைத் தடத்தினை எட்டிப்பிடிக்க
அச்சாரமானது உழைப்பு
வாழ்விற்கான அழைப்பே உழைப்பு !

இயற்கை கூட கற்றுத் தருகுது
உழைப்பு எனும் பாடத்தை
உதயசூரியன் உதித்தால் தான் வெளிச்சம்
வியர்வை சிந்தி உழைத்தால் தான்
விரைவில் கிட்டும் வெற்றிக்கனி
உழைப்பே உயர்விற்கு வழி
உழைப்பே நல்வாழ்விற்கு விழி !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading