சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ வேலாயுதம் ஐயா “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 31.08.2023

எழிலான காரைநகரில் பிறந்து
ஒயிலான ஒல்லாந்து நாட்டினில் வசித்து
ஐக்கியராச்சியத்தில் ஐக்கியமாகி
ஐரோப்பிய வலச் செய்திகளோடு
இருபத்தியாறு வருடங்கள் பயணித்து
அதிரடியாக ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்ற
வேலாயுதம் ஐயாவிற்கு எமது அஞ்சலிகள் !

பத்திரிகை நிருபராய் நாடக நடிகனாய்
திரைப்பட நடிகனாய் தயாரிப்பாளனாய்
செய்தியாளனாய் பல்துறைக் கலைஞனாய் வாழ்ந்து
புலம் பெயர்ந்து வந்த போதும்
கலைத் தாகத்தோடு செயற்பட்ட
கலைஞனாம் வேலாயுதம் ஐயாவை
காலனும் அழைத்தானே கடுகதியில் !

அன்றில் இருந்து இன்றுவரை
ஒல்லாந்து செய்திகளோடு தொடங்கிய பயணம்
ஐரோப்பிய செய்திகளாக பரந்து விரிந்து
இறுதி மூச்சு வரை உறுதியோடு செயற்பட்டு
தீராக் காதலோடு ரி ஆர் ரியை நேசித்து
காதோரம் ஒலித்த குரல் காற்றோடு கலந்ததுவே !

Nada Mohan
Author: Nada Mohan