சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ரஜனி அன்ரன்

விழித்திடு பெண்ணே ! கவி….ரஜனி அன்ரன் (B.A) 07.03.2024

விழித்திடு பெண்ணே விழித்திடு
உடைத்திடு தடைகளை உடைத்திடு
படைத்திடு சரித்திரம் படைத்திடு
புரட்சிப் பெண்கள் வாழ்ந்த பூமியிது
புரட்டிப் போட்டுவிடு கயவர்களை
புதுயுகம் படைத்துவிடு விழிப்போடு !

பதுமையென்றும் பாவையென்றும்
பவ்வியமாய் அழைத்து உன்னை
பாசாங்கும் செய்திடுவார்
மாயவலையில் சிக்காது
தூயவழியில் பயணித்து
தூர விலத்திவிடு துஸ்டர்களை !

பேதையரே நிஜக்கண்களை
ஒருகணம் திறந்து பாரும்
காமுகர்களால் கயவர்களால்
கசங்கி மடிந்தவர் எத்தனை பேர்?
விடியும் பொழுதுகள் உன்னாலே
நொடியும் நீ தயங்காதே பெண்ணே
முடியும் என்று போராடு முனைப்போடு செயற்படு
விழித்திடு பெண்ணே எப்போதும் விழிப்போடு இருந்திடு !

Nada Mohan
Author: Nada Mohan