புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

07.03.24
ஆக்கம் -306
சிறகுகள்

இறகு உதிர உதிரச்
சிறகு முதிர்ந்தாலும்
காற்றின் தாலாட்டுக்
கீதமுடன் வானத்தில்
பறந்து களைத்தது
தாய்க்குருவி

உச்சிக் கிளையில் புல்லின்
பஞ்சு மெத்தையில் பசியோடு
காத்திருக்கும் குஞ்சுக் குருவியை
எண்ணிப் பார்த்தது பரிதாபமாய்

பாரினில் உல்லாசமாகச் சுற்றிடும்
தன் கால்களில் ஏனிந்த நடுக்கம்
வயது போய்விட்டது என்பதாலா ?
எங்கும் தீனி கிடைக்காததால்
சோகமுடனே திரும்பியது

இரைக்காகக் காத்திருந்து வெளியே
வந்த சின்னக் குஞ்சுகளைக் கொத்திக்
கொத்தி கீழே தள்ளி விட்ட போது
“இனிமேல் உன் சொந்தக் காலில் நில் ”
என்றதும் கீழே விழுந்து சிறகொடிந்து
உயிரை மாய்த்துக் கொண்டது .

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading