அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

19.07.22
ஆக்கம்-66
தன்னுயிரில் தாகமா
தன்னுயிரில் இவ்வளவு தாகமா
மன்னுயிரில் எவ்வளவு வேகமாய்
வெறி பிடித்த மிருகம் இரத்தம்
உறிஞ்சிக் குடித்த மோகம்

அஞ்சி அஞ்சி ஆயிரமாயிரம் மைல்கள்
ஓடி ஒழித்துத் திரியும் பஞ்சமா பாதகனே
கஞ்சி குடித்திடினும் நிம்மதியாய்
வாழ்ந்தவனிற்கு நீ செஞ்ச பாவம்

நஞ்சைக் கொடுக்காது கொஞ்சங்
கொஞ்சமாய் பிஞ்சுகளின் தசையை
அறுத்தெடுத்து பாஞ்சு வந்த முதலைக்கு
இரையாக்கிய கொடியவனே

வஞ்சம் தீர்க்கவில்லைத் தமிழன்
எஞ்சிய தன் இனம் காட்டிக் கொடுத்த
எட்டப்பனும் துரத்தவில்லை
உனைத் தேர்ந்தெடுத்த தொட்டப்பனே
வதை முகாமிலிட விஷக் குழவியாய்த்
துரத்துகிறான் தூக்கிலிட

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading