” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

19.07.22
ஆக்கம்-66
தன்னுயிரில் தாகமா
தன்னுயிரில் இவ்வளவு தாகமா
மன்னுயிரில் எவ்வளவு வேகமாய்
வெறி பிடித்த மிருகம் இரத்தம்
உறிஞ்சிக் குடித்த மோகம்

அஞ்சி அஞ்சி ஆயிரமாயிரம் மைல்கள்
ஓடி ஒழித்துத் திரியும் பஞ்சமா பாதகனே
கஞ்சி குடித்திடினும் நிம்மதியாய்
வாழ்ந்தவனிற்கு நீ செஞ்ச பாவம்

நஞ்சைக் கொடுக்காது கொஞ்சங்
கொஞ்சமாய் பிஞ்சுகளின் தசையை
அறுத்தெடுத்து பாஞ்சு வந்த முதலைக்கு
இரையாக்கிய கொடியவனே

வஞ்சம் தீர்க்கவில்லைத் தமிழன்
எஞ்சிய தன் இனம் காட்டிக் கொடுத்த
எட்டப்பனும் துரத்தவில்லை
உனைத் தேர்ந்தெடுத்த தொட்டப்பனே
வதை முகாமிலிட விஷக் குழவியாய்த்
துரத்துகிறான் தூக்கிலிட

Nada Mohan
Author: Nada Mohan