வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம்...

Continue reading

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.07.22
ஆக்கம்-235
போற்றிடும் நெற்றியடி
எத்தனை சோகம் இத்தனை வயதில்
அத்தனையும் எழுதமுடியாது ஏக்கமுடன்
பெருமூச்செறிகிறது பேனா

ஏதிலியாய் எங்கு போனாலும்
துரத்திய தாயக நினைவுகள்
பசிக்கும் பாலுக்கும் பணமில்லாது
தவிக்கும் நெஞ்சங்களில் பஞ்சம்
புரட்டி எடுக்க

திரண்டு வந்த மக்கள் புரட்டிப்
போட்டு சுக்கு நூறாக்கிய அரசியல்
மிரண்டு போனவர் எடுத்தனரே
ஓட்டம்

தன்னுயிரில் காட்டும் வேகம்
மன்னுயிரைக் கொன்றழித்த விவேகம்
நாட்டுப்பற்றில் வோட்டுப் போட்டவனே
நோட்டம் பார்த்து போட்டானே ஒரு அடி
போற்றிடும் நெற்றியடி சரித்திரம்
படைக்கும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

    Continue reading