ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.07.22
ஆக்கம்-235
போற்றிடும் நெற்றியடி
எத்தனை சோகம் இத்தனை வயதில்
அத்தனையும் எழுதமுடியாது ஏக்கமுடன்
பெருமூச்செறிகிறது பேனா

ஏதிலியாய் எங்கு போனாலும்
துரத்திய தாயக நினைவுகள்
பசிக்கும் பாலுக்கும் பணமில்லாது
தவிக்கும் நெஞ்சங்களில் பஞ்சம்
புரட்டி எடுக்க

திரண்டு வந்த மக்கள் புரட்டிப்
போட்டு சுக்கு நூறாக்கிய அரசியல்
மிரண்டு போனவர் எடுத்தனரே
ஓட்டம்

தன்னுயிரில் காட்டும் வேகம்
மன்னுயிரைக் கொன்றழித்த விவேகம்
நாட்டுப்பற்றில் வோட்டுப் போட்டவனே
நோட்டம் பார்த்து போட்டானே ஒரு அடி
போற்றிடும் நெற்றியடி சரித்திரம்
படைக்கும்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading