ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.09.22
ஆக்கம் 243
தாகத்தின் சோகம்
தற்போது வாழுங் காலம்
பொல்லாத உயிர்த் தாகம்
எப்போதும் மனிதனுக்குத்
தொடரும் சோகம்
நாளும் பொழுதும் இயற்கை
செயற்கையுடன் போராடும்
வேகம்

கூழுங் கஞ்சியுங் குடித்து
நிம்மதியாய் உறங்கியவர்
பாழுங் கிணற்றில் பாதாள
உலகில் பூகம்பம் துரத்த
வெள்ளம் பெருக்கெடுக்க
சூறாவளி பறக்கத் துறக்கும்
உயிர்ச் சேதம்

இழக்கும் உடைமை துரத்தித்
தொற்றும் நோய்கள்
இடி முழக்கமாகும் குண்டு வெடிப்பும்
உக்கிரைன் போர் தாக்கமும்
ஆணவம் அடக்க வேரோடு புதைக்கும்
தீராத கோபமா இறைவனின் சாபக்கேடா

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

    Continue reading