மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.09.22
ஆக்கம் 243
தாகத்தின் சோகம்
தற்போது வாழுங் காலம்
பொல்லாத உயிர்த் தாகம்
எப்போதும் மனிதனுக்குத்
தொடரும் சோகம்
நாளும் பொழுதும் இயற்கை
செயற்கையுடன் போராடும்
வேகம்

கூழுங் கஞ்சியுங் குடித்து
நிம்மதியாய் உறங்கியவர்
பாழுங் கிணற்றில் பாதாள
உலகில் பூகம்பம் துரத்த
வெள்ளம் பெருக்கெடுக்க
சூறாவளி பறக்கத் துறக்கும்
உயிர்ச் சேதம்

இழக்கும் உடைமை துரத்தித்
தொற்றும் நோய்கள்
இடி முழக்கமாகும் குண்டு வெடிப்பும்
உக்கிரைன் போர் தாக்கமும்
ஆணவம் அடக்க வேரோடு புதைக்கும்
தீராத கோபமா இறைவனின் சாபக்கேடா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading