திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ராணி சம்பந்தர்

24.09.24
ஆக்கம் 160
விடியுமா தேசம்

காலங்கள் ஓடியது
கவலைகள் கூடியது
உருக்குலைந்து வாடிய
மனமோ மூடிய வாசல்
எப்போது திறக்குமென
அன்றிலிருந்து இன்றுவரை விடியலைத் தேடியது

ஒரு பிடியாவது கிடைக்க விடியலைத்
தேடிய மண்ணின் மைந்தர் நேர்மையாய்
போராடியும் நய
வஞ்சரால் முடிந்தது
உலகறிந்த உண்மையே

ஆங்கிலேயர் செய்த
தவறு தமிழனை
இன்றும் கலங்க
வைக்கிறதே

தொடர்ந்திடும் கண்ணீர் பதிவில்
நடந்து முடிந்த தேர்தலிலாவது
மோசஞ் செய்த
அனுபவ சதியை
வீழ்த்தி வென்ற
புது அதிபரிலாவது
விடியுமா தேசம்.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading