திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ராணி சம்பந்தர்

10.12.24
ஆக்கம் 170
ஈரம்

அருளும் அடிவானம்
அதிகாலை விடியப்
போகுதென கூவிடும்
கொண்டைச் சேவலில்
தெரியும் ஈரம்

மருளும் கண்ணில்
உச்சி வெயில் கணிக்கும் நேரம்
என்னவென்று மண்ணில் ஏர் உழுதிடும் விவசாயியில் புரியும்
ஈரம்

திரளும் கருமேகம்
விண்ணில் கண்டு
மழை சொரியுமென
ஆனந்த நன்றியுடன்
தோகை விரித்தாடும்
மயிலின் ஈரம்

ஈரம் பெற்ற வற்றிய
குளங்கள் நீர் நிறைய
வெள்ளைச் சேலை
உடுத்தி ஒற்றைக் காலில் நின்று ஈரத்
தலையுடன் வெள்ளைக்
கொக்கும் நடனமாடுமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading