10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
வசந்தமே….
சீர்சேர் இயற்கையின் சித்திரச் செதுக்கல்
நேர்கொள் அமைப்பில் புவியின் துலக்கல்
பூக்களின் நெய்தலில் புவிதன்னில் மலர்ச்சி
கோடையின் வனப்பில் நாட்களின் புரட்சி
அழகுறு நயத்தில் ஆழ்மன எழுச்சி
வானுயர் தருக்களின் வளம்நிறை உயர்ச்சி
வசந்தமாய் மலருமே காலத்தின் நீட்சி
மறுடி மறுபடி மலர்ந்திடும் தோப்பு
வசந்தமே மனத்திற்கு உரமிடும் காப்பு!
நன்றி
வசந்தா ஜெகதீசன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.