வசந்தா ஜெகதீசன்

யோசி…
உருளும் உலகில்
நிகழும் வாழ்வு
நிதமும் நிரப்பும்
பட்டறிவே பகிர்வு
பாடமாய் யோசி
விட்டே அகன்ற
விரயத்தனமும்
வீணே போக்கும்
காலக் கரைவும்
பெற்றே தந்த
பேறுகள் யோசி
கற்றவை பெற்றவை
கடமையின் வழிகள்
உரைக்கும் பாடமே
உணர்வென யோசி
புலமை பூக்கும்
புதுமை யோசி
புரட்சி உலகை
புகுத்திட யோசி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading