பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

இதெல்லாம் இப்போ எங்கே..

இதெல்லாம் இப்போ எங்கே..
ஏக்கம் நிறைந்த தலைமுறை
ஏதிலி வாழ்வின் அகநிலை
ஒன்றிடும் வேளை எதுவென
ஒருகணம் குமுறுது மனநிலை

அன்பு பாசம் வரட்சியில்
அகம் நிறைந்த சூழ்ச்சியில்
மனிதம் தொலைந்த வேதனை
மறுபடி மலருமா மனிதநேயத் தேவதை

அடிப்படைத் தேவையின்றியே
ஆட்படும் துயரில் அனுதினம்
ஆதங்கம் தாங்கும் வேரினம்
அல்லற்படுகுதே மானிடம்

புதைந்து போன தேசாய்
பூக்களற்ற தருக்களாய்
வரண்டு போன மனிதமே
வாழ்வை தொலைத்தது உன்னிடம்
வரமாய் கேட்கிறோம் வழி சொல்லு
மனிதம் வாழ வழி சொல்லு

கருணைக் கொலையும் கனதியே
காப்பக வாழ்வும் குமுறலே
எங்கும் பணம் எஜமானாய்
அரங்கம் காணும் அவதிக்குள்
அடைக்கலமாகுதே மனித உயிர்

ஒருவரை ஒருவர் நேசிப்பு
ஒற்றுமை வாழ்வின் ஆதரவு
பற்றிப் படர்ந்தது பழங்காலம்
பாதை மாறுது இக்காலம்

மனிதம் போற்றி மனிதம் காத்து
மனிதநேயம் பொங்குமா
மானுடத்தின் மாண்பு வாழ்வில் தங்குமா
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan